தமிழக காவல்துறையினருக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிக பணிச்சுமை காரணமாக காவலர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக இந்த கொரோனா காலக்கட்டத்தில் காவலர்களுக்கு ஓய்வு என்பதே இல்லாமல் போய்விட்டது.

இந்த நிலையில் தான் காவல்துறையினருக்கு மகிழ்ச்சி தரும் உத்தரவு ஒன்றை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் பிறப்பித்துள்ளார்.

காவல்துறையினருக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என சென்னையை தவிர பிற அனைத்து காவல்துறை ஆணையர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் நீண்ட நாட்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கியும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

இது காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே