டெல்லியில் இருந்து ஆட்சி செய்யாமல் தமிழகத்தில் இருந்து ஆட்சி செய்யும் முறை வேண்டும் – ராகுல் காந்தி

தமிழக்தில் இருந்து ஆளப்படும் ஆட்சி முறையை நான் விரும்புகிறேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்னை அடையாறில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், டெல்லியில் இருந்து ஆட்சி செய்யாமல், தமிழகம் தமிழக்தில் இருந்து ஆளப்படும் ஆட்சி முறையை நான் விரும்புகிறேன்.

நான் எப்பொழுது தமிழ்நாடு என்பது இந்தியா என்று சொன்னேனோ, அப்பவே இந்தியா என்பதும் தமிழ்நாடு தான்.

இந்தியா முன்பு தமிழகம் கீழ்மட்டத்தில் இருக்க வேண்டும் என்று ஒரு கட்டுப்பாடு வந்தால், அது இந்தியாவே இல்லை, அப்படிப்பட்ட இந்தியாவே வேண்டாம். 

ஒரு மொழி இன்னொரு மொழிக்கு மேல், ஒரு பாரம்பரியம் இன்னொரு பராமரியத்திற்கு மேல் என்று சொல்கிற இந்தியாவே வேண்டாம். அனைத்து மொழிகளின் பெருமையும் சேர்ந்தது தான் இந்தியா என கூறியுள்ளார்.

தமிழக மக்கள் அனைவரும் எனக்கு சகோதர சகோதிரிகள். எனக்கு கீழ் கும்பிடு போட்டு நில் என்பதே பாஜகவின் சிந்தாந்தம். பாசத்தால் அரவணைப்பதே காங்கிரேசின் சிந்தாந்தம்.

உத்தரப்பிரசத்தில் ஒரு தலைவர் அமித்ஷாவின் காலில் விழ என்ன காரணம்? அங்கு நடந்தது தான் தமிழக முதல்வருக்கும் நடைபெற்று உள்ளது. மத்திய பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறார்கள்.

எந்த தமிழர்களும் இதை விரும்பமாட்டார்கள். இதில் முதல்வருக்கும் விரும்பம் இல்லை. ஆனால், அவர்கள் காலில் விழவேண்டிய கட்டாயம். முதல்வர் நேர்மையை இழந்த ஒரே காரணத்தால்தான் பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறார்.

அதனால் தான் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முழு ஆதரவையும் கொடுத்து பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ வீழ்த்த வேண்டும் என போராடி வருகிறேன்.

தமிழகத்திற்கு ஒரு அரசியல் மாற்றம் வேண்டும். பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஒரு அருமையான மாநிலம், மிகவும் திறமையான இளைஞர்களை கொண்ட தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே