மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா கரோனா வைரஸால் கடந்த 2-ம் தேதி பாதிக்கப்பட்டார்.
குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமித் ஷா, கடந்த சில நாட்களுக்கு கரோனாவிலிருந்து குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடுத்த சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாக அமித் ஷா ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக கடந்த 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கொரோனாவிற்கு பிந்தைய பராமரிப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து கடந்த 31-ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில் அவர் நேற்று மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.