12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? கொரோனா தடுப்பு பணிக்கு தமிழக சுகாதாரத் துறையில் 2,215 வேலை வாய்ப்பு அறிவிப்பு !

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையிலும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலும் ரயில்வே மருத்துவமனை சார்பில் தற்காலிகமாக மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிக்காக சுகாதாரத் துறையில் தற்காலிகமாக இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணிக்காகத் 2,215 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலியிடங்கள் அனைத்தும் மாவட்ட வாரியாக நிரப்பப்படுகிறது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாகவும், 12ம் வகுப்பில் விலங்கியல், உயிரியல் பாடங்கள் உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், ஓராண்டு சுகாதாரப் பணியாளர் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு மாதம் ரூ.20 ஆயிரம் வரையில் சம்பளம் கொடுக்கப்டுகிறது.

மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

Related Tags :

TN GOVT JOBS| 12TH PASS GOVT JOBS

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே