தயிர் வடை சும்மா பன்னு மாதிரி இருக்கணும்னா இப்படி செய்ங்க…

முக்கிய பொருட்கள்

-1 கப் உளுந்து பருப்பு
-1 தேக்கரண்டி தூள் சர்க்கரை
-250 கிராம் தயிர்

பிரதான உணவு

-தேவையான அளவு மிளகாய் பொடி
-தேவையான அளவு வறுத்த சீரகம் பொடி
-தேவையான அளவு கருப்பு உப்பு
-தேவையான அளவு சீரகம்
-தேவையான அளவு பெருங்காயம்
-தேவையான அளவு கிஸ்மிஸ்
-தேவையான அளவு உப்பு
-1/2 கப் பச்சை சட்னி
-தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
-தேவையான அளவு நீர்
-அழகூட்டுவதற்கு/ அலங்கரிப்பதற்கு
-1-/2 தேக்கரண்டி புளி சட்னி
How to make: தயிர் வடை சும்மா பன்னு மாதிரி இருக்கணும்னா இப்படி செய்ங்க…
Step 1:
உளுத்தம் பருப்பை கழுவி ஆறில் இருந்து ஏழு மணிநேரம் ஊறவைக்கவும்.

Step 2:
ஊறவைத்த உளுத்தம் பருப்பில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து வைத்து கொள்ளவும்.

Step 3:
தயிரில் கட்டிகள் இல்லாதபடி நன்கு அடித்து வைத்து கொள்ளவும். பிறகு அதில் சிறிது உப்பு மற்றும் சர்க்கரை தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.

Step 4:
ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள உளுத்தம் மாவு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அப்பொழுது தான் வடை பஞ்சு போல் நன்றாக வரும். பிறகு அதில் சீரகம் சேர்த்து கலக்கவும்.

Step 5:
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒருபுறம் வைக்கவும்.

Step 6:
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், வடை மாவை எண்ணெயில் போட்டு சுட்டு எடுக்கவும்.

Step 7:
சுட்டு எடுத்த வடையை பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரில் நனைக்கவும். இப்போது தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து வடையை 5-10 நிமிடங்கள் ஊற விடவும்.

Step 8:
பத்து நிமிடம் கழித்து வடையை தண்ணீரில் இருந்து எடுத்து பிழிந்து வேறு ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

Step 9:
பிறகு அதில் தயிர், கருப்பு உப்பு, ஜீரா தூள், சிவப்பு மிளகாய் தூள், கிறீன் சட்னி, இம்லி/புளி சட்னி மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து பரிமாறவும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே