தேவையான பொருட்கள்:
- காளான் – 200 கிராம்
- பெரிய வெங்காயம் – 2
- இஞ்சி – 1 அங்குலம்
- பூண்டு – 6 பல்
- தனியாத்தூள் – 1 மேஜைக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- கசகசா – 2 தேக்கரண்டி
- முந்திரிப்பருப்பு – 10
- மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
- தேங்காய்த்துறுவல் – 1 மேஜைக்கரண்டி
- கொத்தமல்லி இலை – 1 மேஜைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – 50 மில்லி லிட்டர்
செய்முறை:
காளானை சுத்தம் செய்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், தேங்காய்த்துறுவல் இவற்றைத் தனியாகவும் முந்திரிப்பருப்பு, கசகசா இவற்றைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மஸாலாவைப் போட்டு, மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
பச்சை வாசனை போக வதங்கியதும், காளானைப் போட்டு வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கிளறவும்.
காளான் வெந்ததும் அரைத்த கசகசா, முந்திரிப்பருப்பு போட்டு 3 நிமிடங்கள் வதக்கி, கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.