மேற்கு வங்கத்தில் சீக்கியர் தாக்கப்பட்டத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று மே.வங்க காவல்துறை தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் பாஜக நடத்திய போரட்டத்தில் சீக்கிய இளைஞர் ஒருவரை போலீசார் தாக்கிய வீடியோ ஒன்று சமூகவலைத்தலங்களில் வைரலானது.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இது சீக்கியர்களின் மத உணர்வை புண்படுத்தியதாக தெரிவித்தார்.
இவருடன் பலரும் இது குறித்து கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் குறிப்பிட்ட நபர் ஒருவர் கைத்துப்பாக்கியோடு இருந்தால் தான் அவரை வலுக்கட்டாயமாக பிடிக்க நேர்ந்தது; எந்த உள்நோக்கமும் இல்லை என்று மே.வங்க போலீசார் விளக்கம் தெரிவித்துள்ளனர்.