இந்து தாயின் உடலை முஸ்லிம் நண்பர்களுடன் எடுத்துச் சென்ற மகன்கள்..!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியை சேர்ந்த 65 வயது பெண் உடல்நல குறைவால் கடந்த திங்கள்கிழமை உயிர் இழந்துள்ளார்.

தாயின் அருகில் அவரது 2 மகன்கள் மட்டுமே இருந்த நிலையில் , ஊரடங்கு காரணமாக வெளியூரில் இருக்கும் அவர்களது உறவினர்களால் அங்கு வரமுடியவில்லை.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மகன்கள் திண்டாட , நாங்கள் இருக்கிறோம் என கூறி , அந்த பகுதியில் இருந்த சில இஸ்லாமிய இளைஞர்கள் சடலத்தை தகனம் செய்ய உதவியுள்ளனர்.

மேலும், தகனம் செய்யும் இடத்திற்கு உடலை எடுத்துச் செல்ல வாகனங்கள் ஏதும் கிடைக்காததால் இறந்த பெண்மணியின் உடலை சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் தங்கள் தோள்களில் சுமந்து சென்று தகனம் செய்ய உதவி செய்துள்ளனர் அந்த இஸ்லாமிய இளைஞர்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் வைரலானதை அடுத்து, இந்து , முஸ்லீம் இடையே இருக்கும் சகோதரத்துவத்தை இந்த சம்பவம் எடுத்துரைப்பதாக மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர். 

இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் மதம் பார்க்காமல் உதவிய இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே