சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் சித்ரா. இவர் சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக சின்னத்திரைக்குள் என்ட்ரியானார்.

‘மக்கள் டிவி’யில் ஒளிபரப்பான ‘சட்டம் சொல்வது என்ன?’ என்ற நிகழ்ச்சி தான் சித்ரா தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி.

அதன் பிறகு மக்கள் டிவியில் ‘நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுற்றலாம் வாங்க’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

பின், ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘மன்னன் மகள்’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

‘மன்னன் மகள்’ சீரியலுக்கு பிறகு சன் டிவியில் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ (சீசன் 3), விஜய் டிவியில் ‘சரவணன் மீனாட்சி’ (சீசன் 2), ஜீ தமிழில் ‘டார்லிங் டார்லிங்’, கலர்ஸ் தமிழில் ‘வேலுநாச்சி’ போன்ற டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சித்ரா. 

இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தார் சித்ரா.

நடிகை சித்ரா கடந்த 9 ம் தேதி சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதில் தனது கணவரான ஹேம்நாத் உடன் இருந்தபோதே அவரை வெளியே அனுப்பிவிட்டு சித்ரா ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது.

இதையடுத்து சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவரது முகத்தில் இருந்த காயங்கள் அவரது மரணம் தற்கொலைதானா என்ற சந்தேகத்தை கிளப்பியது .

இதனை தொடர்ந்து சித்ராவுடன் அறையில் தங்கியிருந்த அவரது கணவரிடம் போலீசார் தொடர்ந்து 6 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். 

பிரேத பரிசோதனையின் முடிவில் சித்ரா தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டாலும், சித்ராவின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே சித்ராவுக்கும், பிரபல தொழிலதிபர் ஹேமந்த் ரவிக்கும் பதிவு திருமணம் நடந்ததாம்.

கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சித்ராவிடம் “சீரியலில் இனிமேல் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டாம்” என்று ஹேமந்த் ரவி சொன்னதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த புதன் கிழமை அதிகாலை சித்ரா ஷுட்டிங் முடிந்து வந்ததும் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு சண்டை போட்டதை ஒப்புக்கொண்டுள்ளார் ஹேம்நாத். 

அவர் காவல்துறை அதிகாரிகளிடம் அளித்த தகவலின்படி, அறைக்கு வந்த சித்ராவிடம் இன்று எந்த நடிகருடன் ஆடினாய் என்று கேட்டும் வார்த்தைகளை விஷமாக கக்கியுள்ளார்.

பின்னர் இறுதியாக செத்துத் தொலை என்றும் கூறிவிட்டு அறையைவிட்டு கோபத்தில் வெளியேறியிருக்கிறார் ஹேம்நாத்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்ற உண்மை தெரிய வந்ததும், போலீசார் நேற்று இரவு ஹேமந்த் ரவியை கைது செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே