தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதன் படி, தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வீரியம் குறைந்து வருகிறது.
கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளால் நல்ல பலன் கிடைத்துள்ள நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளை அறிவித்து வருகிறது தமிழக அரசு.
இன்று முதல் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் ரூ.10,000க்கும் குறைவான வருமானம் உள்ள சிறிய வழிபாட்டுத்தலங்கள் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.