26 காளைகளை அடக்கிய 2 பேர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு..!!

அவனியாபுர ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கிய விஜய் மற்றும் திருநாவுக்கரசு இருவருக்கு, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பைக்கை பரிசாக வழங்கியுள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில்,தமிழர்களின் வீரத்தை நினைவுகூரும் வண்ணம், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

இன்று உலக புகழ் பெற்ற அவனியாபுர ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிற நிலையில், இந்த போட்டியை காண காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி வருகை புரிந்தார்.

இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் 430 மாடு பிடிவீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க உள்ளனர். மேலும் சுற்றுக்கு 50 வீரர்கள் என களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இன்று உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டியில் வீர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதில்,8 சுற்றுகள் முடிவில் 520 காளைகள் பங்கேற்றன. 420 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். சிறந்த காளையாக ஜி.ஆர் காத்திக் காளை தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 26 காளைகளை அடக்கிய விஜய் மற்றும் திருநாவுக்கரசு இருவரும் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் இவர்கள் இருவருக்கும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பைக்கை பரிசாக வழங்கியுள்ளார்.

கடந்தாண்டும் விஜய் முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே