நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 38,902 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 லட்சத்து 77 ஆயிரத்து 618 ஆக அதிகரித்தது.
கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 26,273 -ஆக அதிகரித்தது. நாட்டில் தொடர்ந்து 4-ஆவது நாளாக சனிக்கிழமைமையும் 30,000-க்கும் அதிகமானோருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 38,902 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது;
அதே கால அளவில் 543 பேர் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 26,816-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நோய்த்தொற்றுக்காக 3,73,379 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,77,423 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3,00,937 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஜூலை 18- ஆம் தேதி வரை 1,34,33,742 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் சனிக்கிழமை மட்டும் 3,61,024 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதிப்பு: 10,77,618
பலி: 26,816
குணமடைந்தோர்: 6,77,423
சிகிச்சை பெற்று வருவோா்: 3,73,379