தமிழக ஊராட்சிகளில் இன்டர்நெட் வழங்கும் டெண்டரில் முறையான விதிமுறைகளை பாரத்நெட் பின்பற்றாததால், டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அதிவேக இன்டர்நெட் வசதியை மேம்படுத்தும் பொருட்டு பாரத் நெட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கான டெண்டர் மத்திய அரசால் கோரப்பட்டது. தற்போது டெண்டரில் விதிகளை முறையாக பின்பற்றவில்லை என குற்றம் சாட்டப்பட்டு மத்திய வர்த்தக அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 12, 524 கிராமங்களுக்கு அதிவேக இன்டர்நெட் இணைப்பு வழங்குவதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தில் டெண்டர் விடப்பட்டதில் விதிகள் மீறப்பட்டதாகவும், கருவிகளுக்கான டெண்டரில் உள்ள குறைகள் காணப்படுவதாகவும், அதனால் மறு டெண்டர் விடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக சில அரசு நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும், கட்சிகளும் புகார் கூறியதை அடுத்து குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து மத்திய அரசு டெண்டரை ரத்து செய்துள்ளது.