பிறந்த குழந்தையை ஃப்ரீசருக்குள் வைத்து கொன்ற சம்பவம்..!!

ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள வெர்க்-துலா என்ற இடத்தில் பெற்றோருடன் 14 வயது சிறுமி வசித்து வந்துள்ளார்.

இச்சிறுமிக்கு வயிறு பெரிதாகிக்கொண்டே இருப்பதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் சிறுமியின் தாயாரிடம் கேட்டபோது, அவருக்கு எடை கூடியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

ஆனால் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த சிறுமி, தன் பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வந்துள்ளார்.

பின்னர் பிரசவ காலம் ஆனதை உணர்ந்த அச்சிறுமி ஆளில்லாத இடத்திற்குச் சென்று குழந்தையை தாமாகவே பெற்றெடுத்திருக்கிறார்.

தன் அப்பா, தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்த அவர், குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தங்களுக்கு சொந்தமான கேரேஜில் உள்ள ஒரு ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து மூடியிருக்கிறார். 

குழந்தைப் பிறப்புக்குப் பிறகு, அந்த சிறுமிக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதை கவனித்த தாயார், மருத்துவமனைக்குச் செல்ல ஆம்புலன்ஸை அழைத்திருக்கிறார்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மருத்துவர்களிடம் தான் கர்ப்பமாக இருந்ததையும், குழந்தை பெற்றெடுத்ததையும் கூறியிருக்கிறார். மருத்துவர்கள் அக்குழந்தை குறித்து கேட்டனர்.

அப்போது அந்தக் குழந்தையை ஃப்ரீசரில் வைத்திருப்பதையும் கூறியிருக்கிறார். ஆனால் அதிக நேரம் ஆனதால் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது.

அதேநேரத்தில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பான புகாரில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் சிறுமி கர்ப்பமான பின்னர் இருவரும் காதலை முறித்துக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே