தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நடிகர் கார்த்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வியாழன்று அவர் கூறியுள்ளதாவது:
தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
புதிய வேளாண் சட்டங்களால் இன்னும் மிக மோசமாக பாதிப்படைவோம் என்று விவசாயிகள் கருதுகிறார்கள்.
உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.