சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சாமியானா பந்தல், மைக் செட் ஏற்பாடுகளுடன் நாளை சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.
- வாடிக்கையாளர்கள் கட்டாயம் 3 அடி இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும்.
- சானிடைசரால் கைகளை சுத்தம் செய்த பிறகே வாடிக்கையாளர்களை கவுண்டரில் அனுமதிக்க வேண்டும்.
- நாளொன்றுக்கு டாஸ்மாக் கடைகளில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க வேண்டும்.
- கடையின் கிரில் பகுதிக்கு வெளிப்படையான நெகிழி (Transparent Sheet)விற்பனை கவுன்ட்டர் தவிர்த்து பொருத்தப்படவேண்டும்.
- தடுப்பு அமைத்து அதன் அளவு விவரம் குறிப்பிடவும்.
- வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்க குறைந்தது 3 அடி இடைவெளி விட்டு 50 வட்டங்கள் வண்ணத்தினால் அல்லது பிளீச்சிங் பவுடரால் அமைக்கவும்.
- தடுப்பு சுவர் அமைத்தும் வண்ணத்தினால் 3 அடி இடைவெளியில் வட்டங்கள் அமைத்தும் கடை எண்ணுடன் மாவட்ட மேலாளருக்கு புகைப்படம் அனுப்பவும்.
- மாவட்ட மேலாளரின் ஒப்புதல் பெற்ற பின்னரே கடை திறக்கப்பட வேண்டும்.
- தன்னார்வலர்கள் அல்லது மதுக்கடை ஊழியர்கள் 5 பேரை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தி கொள்ளவும்.
- கடையில் போதிய இடம் இருப்பின் 2 கவுன்ட்டர்களை அமைத்துக்கொள்ளவும்.
- தேவைப்படும் போதெல்லாம் கடையின் சுற்றுபுறம் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
- குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
- இரு நபர்களுக்கு இடையில் சமூக இடைவெளி குறைந்தது 3 அடி இருக்க வேண்டும்.
- அனைத்து வாடிக்கையாளர்களும் சானிடைசரால் சுத்தம் செய்த பின்னரே கவுன்டரில் அனுமதிக்க வேண்டும்.
- கடைப்பணியாளர்கள் தற்போது வழங்கிய காட்டன் கையுறை, மாஸ்க் மற்றும் Face Shield அணிந்து பணிபுரிய வேண்டும்.
- அனைத்து பணிகளையும் முடித்து பிற்பகல் 3.00 மணிக்குள் கடையின் சுற்றுபுறத்தை தூய்மை செய்ய வேண்டும்.
- மேற்காணும் பணிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படும். தவறும்பட்சத்தில் கடைகள் திறக்கப்படமாட்டது.
நாளை முதல் இருந்து சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மது வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.