சென்னை ராஜூவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜூவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையின் வளாகத்தில் இருக்கும் செவிலியர் கல்லூரியின் 2ஆவது மாடியில் உள்ள ஆய்வக அறையில் உள்ள ஏ.சியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.

அங்கிருந்த மாணவிகள் சுதாரிப்பதற்குள் தீ மளமளவென பரவியது.

ஆய்வகத்தின் உள்ளே தெர்மாகோல் மூலம் அமைக்கப்பட்ட கூறையிலும் தீ பரவ ஆரம்பித்தது. இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே