தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் சிறப்பு ரயில்களின் சேவை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு கொண்டு வந்தததையடுத்து பல்வேறு மாநிலங்களில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்கி வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாமென்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நியைில் மீண்டும் ஆகஸ்ட் 31 வரை தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள்:
- திருச்சி – செங்கல்பட்டு, மதுரை – விழுப்புரம் இடையிலான சிறப்பு ரயில் சேவை ரத்து.
- கோவை – காட்பாடி, கோவை – அரக்கோணம் இடையிலான சிறப்பு ரயில் சேவை ரத்து.
- கோவை – மயிலாடுதுறை இடையிலான ஜனசதாப்தி ரயில் சேவையும் ரத்து.
- திருச்சி – நாகர்கோவில் இடையிலான ரயில் சேவையும் ரத்து.
- மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் திருச்சி – செங்கல்பட்டு ரயில் சேவையும் ரத்து.