கட்சியை கைப்பற்ற சிலர் சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள் – முதல்வர் பழனிசாமி

சிலர் திட்டமிட்டு அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்வதாக, சசிகலா மற்றும் தினகரனின் பெயரைக் குறிப்பிடாமல் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று அதிமுக சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி கூறியதாவது, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள்.

அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாதவர்கள் அதிமுகவின் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒரு போதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது.

கட்சி ஒரு போதும் அவர்களுக்கு தலைவணங்காது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க முடியாது.

அடிப்படை தொண்டன்தான் இனி அதிமுகவில் முதல்வராக முடியும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே