சிம்பு – த்ரிஷா திருமணம்? இது என்ன புது கதை! வதந்தியா, உண்மையா?

சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் திருமணம் செய்ய உள்ளனர் என்கிற வதந்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சிம்பு. சொந்த வாழ்க்கை, சினிமா வாழ்க்கை என அனைத்திலும் பல்வேறு சர்ச்சைகளில் அவர் இதற்கு முன்பு சிக்கியுள்ளார். தற்போது 37 வயதாகும் சிம்பு இதற்கு முன்பு நயன்தாரா மற்றும் ஹன்சிகா ஆகியோருடன் காதலில் இருந்து இருக்கிறார். சில காலம் தான் என்றாலும் அவரது காதல் பற்றிய செய்திகள் மிகவும் பரபரப்பாகவே பேசப்பட்டது. காதல் பிரிவுக்கு பிறகு அவரது திருமணம் பற்றியும் அடிக்கடி பல்வேறு செய்திகள் வருகின்றன. அது உண்மையா வதந்தியா என்பது தெரியாமல் ரசிகர்கள் விழிப்பதும் அடிக்கடி நடந்து வருகிறது.
சென்ற மாதம் சிம்புவுக்கு லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுடன் திருமணம் என செய்தி பரவியது. ஆனால் அந்த செய்தி முற்றிலும் பொய்யானது என அவரது அப்பா டி ராஜேந்தர் மற்றும் அம்மா உஷா ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். ’எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்ணை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிம்புவின் திருமணம் பற்றிய செய்தியை நாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்’ என கூறியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது சிம்பு மற்றும் த்ரிஷா ஆகியோருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என வதந்தி பரவி வருகிறது.

சிம்பு எப்போதும் அனைத்து விஷயங்களையும் மிகவும் வெளிப்படையாக பேசுபவர். இதை அவர் மறைத்து வைத்து இருப்பாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அதனால் வழக்கம் போல இந்த செய்தியும் வதந்தியாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொரோனா லாக் டவுன் நேரத்தில் வதந்தி பரப்புபவர்கள் கொஞ்சம் ஓவர் டைம் பார்த்து தான் இத்தகைய வதந்திகளை பரப்புகிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு த்ரிஷா அளித்த பேட்டி ஒன்றில் சிம்பு பற்றி பேசியிருந்தார். ’சிம்புவை எனக்கு ஏழு வருடங்களாக தெரியும். அவர் என்னுடைய டைப் இல்லை. அவருடன் நான் காதலில் விழ மாட்டேன். அவர் என்னுடைய சிறந்த நண்பர். ஒரு நண்பருடன் காதலில் விழ முடியாது என நான் நம்புகிறேன்’ என த்ரிஷா கூறியிருந்தார்.

மேலும் சிம்புவும் தான் அளித்த பேட்டிகளில் த்ரிஷா ஒரு சிறந்த தோழி என்று மட்டுமே கூறி வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா மற்றும் சிம்பு இருவரும் ஜோடியாக நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் 2010ல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் இருவரது கெமிஸ்ட்ரி பற்றித் தான் ரசிகர்கள் அதிகம் பேசினார்கள். அந்த படத்தின் தொடர்ச்சியாக சமீபத்தில் கௌதம் மேனன் ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார். கொரோனா லாக் டவுன் நேரத்தில் வீட்டிலிருந்தே இயக்குனர் கௌதம் மேனன் இந்த படத்தினை இயக்கி இருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதோடு அந்த குறும்படத்தில் ’கார்த்திக் என்னுடைய மூன்றாவது குழந்தை போன்றவர்’ என த்ரிஷா பேசும் ஒரு வசனமும் அதிகம் வைரலானது. அதை மிகவும் அதிக அளவில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.த்ரிஷா கையில் சிம்பு குழந்தையாக இருப்பது போல மீம்கள் அதிகம் உலா வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே