இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்டுகிறது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்லும், அதே போல் இங்கிலாந்து அணி தோல்வி பெற்றால் தொடரை இழக்கும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்திய அணியில் காயம் காரணமாக விலகி உள்ள ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ்க்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அதே போல் முதல் ஒரு நாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சரியாக பந்துவீசவில்லை. 9 ஓவர்கள் வீசிய அவர் 60 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியது மட்டுமில்லாமல் விக்கெட்டும் ஏதும் வீழ்த்தவில்லை. இதானல் 2-வது ஒரு நாள் போட்டியில் அவருக்கு பதில் சஹாலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் முக்கிய மாற்றம் செய்து 2-வது ஒரு நாள் போட்டியை வெல்வதற்கு இந்திய அணி தீவிர பயிற்சி எடுத்து வருகிறது.

இந்திய உத்தேச அணி : ரோஹித் சர்மா, ஷிகார் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா, சர்துல் தாகூர், புவனேஸ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா, சஹால்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே