சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான மூன்று காவலர்களுக்கு வருகிற 23 ஆம் தேதி வரை சிபிஐ காவல் அளித்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 போலீஸாரும் கடந்த வாரம் 3 நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை ஜூலை 30 வரை நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
5 போலீஸாரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட 5 போலீஸாரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டிருந்தது.
இதில் சிபிஐ விசாரணைக்கு 3 பேர் சம்மதம் தெரிவித்த நிலையில், சாமதுரை, செல்லதுரை, வெயில் முத்து ஆகிய மூன்று காவலர்களுக்கும் 23ம் தேதி வரை சிபிஐ காவல் அளித்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.