சாத்தான்குளம் கொலை : 2-ம் கட்டமாக கைது செய்யப்பட்ட 3 போலீசாருக்கு 23-ந் தேதி வரை சிபிஐ காவல்

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான மூன்று காவலர்களுக்கு வருகிற 23 ஆம் தேதி வரை சிபிஐ காவல் அளித்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 போலீஸாரும் கடந்த வாரம் 3 நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை ஜூலை 30 வரை நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

5 போலீஸாரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட 5 போலீஸாரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டிருந்தது. 

இதில் சிபிஐ விசாரணைக்கு 3 பேர் சம்மதம் தெரிவித்த நிலையில், சாமதுரை, செல்லதுரை, வெயில் முத்து ஆகிய மூன்று காவலர்களுக்கும் 23ம் தேதி வரை சிபிஐ காவல் அளித்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே