நடிகர் அர்ஜுன் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி!

பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அர்ஜூன் அவர்களின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன். கடைசியாக இவர் அர்ஜூன் இயக்கத்தில் உருவான ‘ சொல்லி விடவா ‘ படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது ;

சமீபத்தில் நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. எனவே தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு ஒரு மருத்துவ குழுவினரின் வழிநடத்துதலின் படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களாக தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் , தயவு செய்து கவனமாக இருங்கள் என்றும்; அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருங்கள் ,தயவு செய்து முகமூடியை அணியுங்கள் ,

அதிக ஆரோக்கியத்துடன் விரைவில் மீண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தான் அர்ஜுன் அவர்களின் மருமகனும், நடிகருமான துருவ் சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே