இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகிய சாய்னா நேவால்…

இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால், காயம் காரணமாக இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார்.

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த இந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சிந்து, சாய்னா உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டி வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில், டென்மார்க்கின் மியா ப்ளிச்பெட்டை அவர் எதிர்கொண்டார். போட்டி, 21-8, 10-4 என்ற செட் கணக்கில் விறுவிறுப்பாக சென்றபோது, தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக சாய்னா நேவால் அவதியுற்றார். தொடர்ந்து ஏற்பட்ட வலியால், அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

கடந்த வாரம் நடந்த சுவிட்சர்லாந்து ஓபனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோலவே கொரோனா காரணமாக  நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பலரும் இந்த போட்டியில் இருந்து ஒதுங்கி உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே