என்.எல்.சியில் பாய்லர் வெடித்து உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு – என்.எல்.சி நிர்வாகம்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யின் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

அதில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் நேற்று பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரங்கல் தெரிவித்து தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தார்

இதையடுத்து உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்றும்; வீட்டில் ஒருவருக்கு என்.எல்.சியில் நிரந்தர வேலை வழங்கப்படும் என்று என்.எல்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே