மதுரை மக்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகிறது. கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வீடு வீடாக சென்று மக்கள் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தமிழகத்தில் நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அந்தந்த மாவட்டத்துக்குள் மட்டும் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரே மண்டலத்துக்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்.

மாவட்டங்களுக்கு இடையே கார் , இரு சக்கர வாகனம் , தனியார் போக்குவரத்து முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. 

மேலும் மதுரை மாவட்ட மக்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே