இந்தியாவின் வான்படை வலிமையை அதிகரிக்க பிரான்சிடமிருந்து ரேபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 5 விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது.
பிரான்சில் இருந்து புறப்பட்ட விமானங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வருகின்றது. எமிரேட்ஸ் வரும் விமானங்களுக்கு வழியில் எரிபொருள் நிரப்பும் பொறுப்பை பிரான்ஸ் ஏற்றுக்கொண்டது.
அந்த வகையில் ரபேல் விமானங்களுக்கு விண்ணில் பறக்கும் போது எரிபொருள் நிரப்பப்பட்டது.
அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எமிரேட்ஸில் இருந்து மீண்டும் எரிப்பொருள் நிரப்பப்பட்டு 29 அன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமான தளத்திற்கு வந்தடையும்.