தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ள 1,31,436 பேருக்கான சமவாய்ப்பு எண்கள் ( Random Number) வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர கடந்த ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 16 வரை மாணவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அந்த வகையில் 1,60,834 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,31,436 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர்.
இந்நிலையில் மாணவர்களுக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஏற்கனவே அறிவித்தப்படி இன்று வெளியிட்டார்.
ஒரே மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு முன்னுரிமை ஏற்படுத்தும் 10 இலக்கு எண் வெளியிடப்பட்டது.
குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனைத்து பதிவு செய்த மாணவர்களுக்கும் ரேண்டம் எண் அனுப்பப்பட்டது.