CAA குறித்து ரஜினி ஆராய்ந்து பேசியிருக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை ஆராய்ந்து, சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என நடிகர் ரஜினி காந்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யோசனை தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோவளம் பகுதி மக்களிடம் மு.க.ஸ்டாலின் கையெழுத்து வாங்கினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை திருத்த சட்டத்தால், ஏற்படும் கொடுமைகள், கஷ்டங்களை, முதலில் ரஜினிகாந்த் தெரிந்து கொள்ளாதது வருத்தம் அளிப்பதாக கூறினார்.

ஒருவேளை அதன் விளைவுகள் ரஜினிக்கு தெரிந்திருந்தால், தனது நிலைப்பாட்டை அவர் மாற்றி இருப்பார் எனவும் கூறினார்.

இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் துரோகம் இழைக்கும், CAA, NRC, NPR ஆகியவற்றிற்கு எதிராக மற்ற மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் இயற்றப்பட்டது போல் தமிழகத்திலும் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே