கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப்பணிகள் குறித்து பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்று (19.07.2020) காலை பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்கள்.

இந்தியாவிலேயே, அதிகபட்சமாக தற்போது தமிழ்நாட்டில், நாள் ஒன்றுக்கு 48,000 கரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும், கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு, தமிழ்நாடு அரசு முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும்; விரைவில் தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாக முதல்வர், பிரதமரிடம் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே