தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து இன்று (ஏப். 15) ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா பரவி வரும் சூழலில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் உள்ள சவால்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

ஏற்கெனவே சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி மே மாதம் பொதுத்தேர்வை நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.

தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிகல்விதுறை செயலாளர், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே