வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு ?? – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..!!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்து வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. சமூக வலைத்தளங்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் வைரலானது.

மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றமும் இது தொடர்பாக அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், மே மாதம் 2 ஆம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் உண்மை கிடையாது என்றும்; திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மே மாதம் 1 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே