பெட்ரோல் பங்க்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் இனி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுமுடக்கத்தின் 4-ஆம் கட்ட தளர்வில் பெட்ரோல் பங்க்குகள் இயங்குவதற்கான நேரம் 2 மணி நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இரவு 8 மணி வரை பெட்ரோல் பங்க்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரவு 10 மணி வரை இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே