கொரோனா பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்குள் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி..!!

கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், நகரப்பேருந்துகள் மட்டும் இயங்க அனுமதி.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

அந்த வகையில் கடந்த ஜூன் 14ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், தற்போது புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், (அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு )நகரப்பேருந்துகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் 50% பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே