மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.
சமூக நலத்திட்டத்தின் கீழ் மாநில அரசால் வழங்கப்படும் ‘மது பாபு பென்ஷன் யோஜனா’ ஓய்வூதிய திட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களையும் சேர்பதாக ஒடிசா அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இதில் மூன்றாம் பாலினத்தவர்களை சேர்க்க முதல்வர் நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனால் அவர்களின் வயதுக்கேற்ப ரூ.500 முதல் ரூ.900 வரை ஓய்வூதியம் கிடைக்கும் என்று மாநில அமைச்சர் அசோக் பாண்டா தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் 6000 மூன்றாம் பாலினத்தவர்கள் பயன்பெருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளாது.
இதற்கு தேவையான நிதியுதவி ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பயனர்களுக்கு விரைவில் பணம் கிடைக்கும் என்றும் ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பிஜூ ஜனதா தளம் கட்சி அளித்த வாக்குறுதிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
மேலும் ஓய்வூதியத்தை பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்கள் MBPY அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.