திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

திருவள்ளூரில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியாக திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கத்தில் ரூ.385.63 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

மத்திய அரசின் நிதியுதவியுடன், கடந்த 2019ம் ஆண்டில், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அதிமுக அரசு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று சரித்திர சாதனையை படைத்துள்ளது.

இந் நிலையில்,சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம், திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கத்தில் ரூ.385.63 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளூரில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் இந்த மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது.

அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே