முப்தி நூர் வாலி மெசூத் சர்வதேசத் தீவிரவாதியாக அறிவிப்பு

தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை உலகளாவிய பயங்கரவாதியாக ஐநா அறிவித்துள்ளது.

அல்-கைதாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஆதரவாக நிதியளித்தல், திட்டமிடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது ஐநா பாதுகாப்புக் குழு தடைவிதித்துள்ளது.

ஐநா பாதுகாப்புக் குழு நேற்று ஐ.எஸ்.ஐ.எல் (டாஷ்) மற்றும் அல்-கைதா பொருளாதாரத் தடைகள் பட்டியலில் மெஹ்சுத்தை சேர்த்தது.

அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது. அவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுவிடும். தற்போது அவரை உலகளாவிய பயங்கரவாதியாகவும் ஐநா அறிவித்துள்ளது.

அல்-கைதாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஆதரவான செயல்பாடுகளுக்கு நிதியளித்தல், திட்டமிடல், உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதற்காக மெஹ்சுத் பட்டியலிடப்பட்டதாக ஐநா-வின் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

அல்-கைதாவுடனான தொடர்புக்காக தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் ஜூலை 29, 2011 அன்று தடைசெய்யப்பட்டது.

தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் முன்னாள் தலைவர் மெளலானா ஃபஸ்லுல்லாவின் மரணத்தைத் தொடர்ந்து, 2018 ஜூன் மாதம், மெஹ்சுத் அவ்வமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு அவ்வமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.

2010 மே 1 அன்று டைம்ஸ் சதுக்கத்தில் குண்டுவெடிப்பு முயற்சிக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது.

2010 ஏப்ரலில் பெஷாவரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்திற்கு எதிராக பலதரப்பட்ட தாக்குதல்களை இவ்வமைப்புதான் நடத்தியது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே