தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயக்கம்..!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மே 10 முதல் சிறு தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்தபோதும் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் மே 24ஆம் தேதி முதல் தளர்வில்லா பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த பொதுமுடக்கம் 24/05/2021 காலை முதல் நடைமுறைக்கு வரும். பொதுமக்கள் நலன் கருதி இன்று (22/05/2021) இரவு 09.00 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாளை (23/05/2021) ஒருநாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தையொட்டி இன்றும், நாளையும் தமிழகத்தில் 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளியூர் செல்லும் பயணிகளின் நல்ன் கருதி இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே