அமெரிக்காவில் உலக வங்கி தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உலக வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் குடிநீர், வீட்டு வசதி மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான நிதியுதவி பெறுவதற்காக உலக வங்கியின் செயல் இயக்குனர் அபர்ணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தமிழக நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் உலக வங்கியின் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அடுத்ததாக பன்னாட்டு நிதியத்தின் அலுவலகத்திற்கு சென்ற பன்னீர்செல்வம் பன்னாட்டு நிதியத்தின் செயல் இயக்குனர் சுர்ஜித்பாலாவிடம் தமிழக பொது நிதி செலவினம் மற்றும் நிதி திறன் மேம்பாட்டு திட்டங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே