சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் அஜித் தோவல் பேச்சுவார்த்தை

சீன வெளியுறவுத் துறை அமைச்சருடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொலைபேசி வாயிலாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி உடன், அஜித் தோவல் நேற்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, சமீப காலமாக இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்டு வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து மிக விரிவாக ஆலோசனை நடத்தி இரு தரப்பு கருத்துகளையும் பகிர்ந்து கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்து ராஜாங்க மற்றும் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே