பஞ்சாப், கர்நாடகாவில் ஊரடங்கில் தளர்வு இல்லை..!

பஞ்சாப், கர்நாடக மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் குறைந்ததால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு செல்கிறது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17265 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 543 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.

இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அந்த தளர்வுகள் இன்று முதல் அமல்படுத்தப்படும்.

இந்நிலையில், கொரோனாவின் தீவிரம் குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அமுல்படுத்தப்போவதில்லை என பஞ்சாப், கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 

மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என இரு மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே