மக்களவையில் பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலிக் கதைகளை உருவாக்குகிறார்.

அரசுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில்களைக் கேட்கும் அளவிற்கு அவருக்கு பொறுமை இல்லை.

அவர் அநேகமாக இந்தியாவுக்கான அழிவுக்கால மனிதராக மாறி வருகிறார்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அரசுகள் தங்கள் வாக்குறுதி அளித்த வேளாண் கடன்களை ஏன் தள்ளுபடி செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான தனது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு மசோதாவை கிழித்தெறிந்து அரசியலமைப்பு அதிகாரிகளை அவமானப்படுத்தியவர் ராகுல் காந்தி என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே