நீலகிரியை புரட்டி எடுக்கும் மழை… தொடரும் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6 வது நாளாக பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் நியல்புவாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் வேகமாய் நிரம்பும் பவானிசாகர் அணை இதன் காரணமாக கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கனமழையால் எமரால்டு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கனமழை தொடரும் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே