என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை கடையடைப்பு நடைபெறுகிறது.
நெய்வேலியில் மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் நாளை மூடப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின்நிலையத்தில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறியதில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 17 தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் உயிரிழப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் இது போன்ற சம்பவங்கள் தொடருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பல தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை முழுக்கடையடைப்பு நடைபெறும் என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், மருந்துக் கடைகள் மட்டும் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது.