கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைப்பு!

கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வரும் மே மாதம் 3-ம் தேதி, நீட் தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாணவர்களின் நலன் கருதி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே