தொடர் மழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அடையாறு ஆறு ஊரப்பாக்கம் ஆதனூரில் இருந்து தொடங்கி முடிச்சூர், வரதராஜபுரம் வழியாக மெரினா கடற்கரையில் கலக்கிறது.

இந்நிலையில் சென்னை புறநகர்ப் பகுதியில் தொடர்மழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக முடிச்சூர், வரதராஜபுரத்தில் மழைநீர் புகுந்து கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்தது.

இந்நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அடையாற்றில் கரைகளில் பலவீனமாக இருக்கக்கூடிய பகுதிகளை உடனடியாக பலப்படுத்த வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், வெள்ள நீர் ஊருக்குள் வராத அளவுக்கு தடுப்புகளை அமைத்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே