நிவர் புயல் காரணமாக, சென்னை முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை, அவசரகால வேகத்தில் விரைவாக அகற்றுமாறு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் பலத்த காற்று காரணமாக சென்னையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பேனர் மற்றும் கட்அவுட்கள் கீழே விழுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும்; இதனால் உயிர் சேதம், பொருள் சேதம் அடைய வாய்ப்புகள் இருப்பதாகவும் எனவே உடனடியாக சென்னையில் உள்ள அனைத்து பேனர் கட்அவுட்கள்களை இன்று மதியம் 12 மணிக்குள் நீக்கவேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்

புயல் காரணமாக அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேனர்களை அகற்ற வேண்டும் என்றும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே