கரூர் அருகே சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் வெடித்து தாய் மற்றும் 2 மகன்கள் உயிரிழப்பு!

கரூர் ராயனூரில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகன்கள் தீப்பிடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் ராயனூரை சேர்ந்தவர் முத்துலக்ஷ்மி. இவர் தனது கணவரை பிரிந்து தனது இரட்டை ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் முத்துலக்ஷ்மி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேரும் பரிதாபமாக இறந்துள்ளனர்.

வீட்டினுள் சார்ஜ் போட்டு, அருகில் தூங்கிக் கொண்டிருந்த போது செல்போன் வெடித்ததாகவும், செல்போன் வெடித்ததால் ஏற்பட்ட தீ பரவியதில் தாய் முத்துலக்ஷ்மி மரணம் அடைந்ததாகவும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரின் மூன்று வயது மகன்கள் இருவரும் செல்லும் வழியிலயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தி போலீசார் இது விபத்தா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே