பணம் கையாடல் சர்ச்சை: கணக்காளர் ரம்யா பற்றி விஷால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

நடிகர் விஷால் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தின் மூலமாக பல படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த ரம்யா என்ற பெண் பணம் கையாடல் செய்து விட்டார் என சமீபத்தில் அந்த நிறுவனத்தின் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

தன் மீது சுமத்தப்பட்ட புகார் பற்றி கணக்காளர் ரம்யா பேட்டி அளித்திருந்தார். அதில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதற்கான ஆதாரம் இருப்பதாகவும், கணக்குகளை பொதுவெளியில் அல்லது அரசிடம் வெளியிட தயார் என்றும் அவர் கூறியிருந்தார். விஷால் தன்னுடைய அலுவலகத்தில் தொடர்ந்து நடத்தும் கட்டப் பஞ்சாயத்துக்கு நான் தான் சாட்சி என கூறிய அவர், திரைப்படங்களில் பார்ப்பது போல அவர் ஹீரோ இல்லை பெரிய வில்லன் என தெரிவித்திருந்தார். மேலும் VFF மேனேஜர் ஹரி அடியாட்களை வைத்து தன்னையும் தன் குடும்பத்தையும் தாக்கியதாக கூறிய அவர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

வருமான வரி துறைக்கு செலுத்த வேண்டிய தொகையை சுமார் 45 லட்சம் ரூபாய் வரை ரம்யா பண மோசடி செய்துள்ளார் என விஷால் தரப்பு புகார் கூறிய நிலையில், சில நாட்களுக்குப் பிறகு விஷால் மேனேஜர் ஹரி கிருஷ்ணாவின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி இருந்தது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பொது அறிவிப்பு ஒன்றை சற்று முன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
எங்கள்‌ “விஷால்‌ ஃபிலிம்‌ ஃபேக்டரி’” நிறுவனத்தில்‌ கணக்காளராக பணிபுரிந்த திருமதி ரம்யா அவர்கள்‌ நிறுவனத்தில்‌ பல வருடங்களாக வங்கிக்‌ கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி ரூ.45,00,000 வரை ஏமாற்றியுள்ளார்‌ என்பதை கண்டறியப்பட்டூ 30.6.2020 என்று காவல்‌ துறையில்‌ புகார்‌ அளிக்கப்பட்டு விருகம்பாக்கம்‌ காவல்‌ நீலையத்தில்‌ மோசடி தொடர்புடைய பிரிவின்‌ கீழ்‌ 7.7.2020 அன்று வழக்குப்பதீவு செய்யப்பட்டு விசாரணையில்‌ உள்ளார்‌.

எனவே திருமதி ரம்யா இனி எங்கள்‌ நிறுவனமான “விஷால்‌ ஃபிலிம்‌ ஃயேக்டரியில்‌”” பணியாற்றவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்‌. “விஷால்‌ ஃபிலிம்‌ ஃபேக்டரி” நிறுவனத்தின்‌ கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும்‌ இனிமேல்‌ திருமதி ரம்யா அவர்களை யாரும்‌ தொடர்பு கொள்ள வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப் படுகிறது. மேலும்‌ மீறி தொடர்பு வைத்துக்‌ கொண்டால்‌ நீர்வாகம்‌ பொறுப்பல்ல என்பதை இதன்‌
மூலம்‌ தெரிவித்துக் கொள்கிறோம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளனர்.
மேலும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தற்போது துப்பறிவாளன் 2 மற்றும் சக்ரா ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. துப்பறிவாளன் 2 படத்தினை இயக்குனர் மிஷ்கின் இயக்கி வந்த நிலையில் அதில் இருந்து திடீரென வெளியேறிவிட்டார் என்பதால் அந்த படத்தினை விஷாலே இயக்கப் போகிறார் என அறிவிப்பு இதற்கு முன்னர் வந்தது. ஆனால் மீண்டும் விஷால் மற்றும் மிஷ்கின் சமரசமாகி இந்த படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர் என கடந்த சில நாட்களாக செய்திகள் பரவியது. ஆனால் அது வதந்தி என தெரிய வந்துள்ளது.

விஷாலின் மற்றொரு படமான சக்ரா படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் விஷால் ராணுவ வீரராக நடித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே