சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்ற மோடி அரசு நடவடிக்கை : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மற்றும் என்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டனர்.

சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்ற மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜான்குமாரை ஆதரித்து நாராயணசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களைக் சிபிஐ கொண்டு மிரட்டுவதாக அவர் விமர்சித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே